இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனைத்து நெருக்கடி நிலைகளும் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினாலேயே முகாமைத்துவம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையையும் விக்ரமசிங்கவே முகாமைத்துவம் செய்ய வேண்டியிருக்கும் என்று இன்று தெரிவித்தார்.
நாடு மேலும் நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாடாகவும் மக்களாகவும் இந்த நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
யாராவது இந்தச் சூழ்நிலையை முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாடு எதிர்கொண்ட அனைத்து நெருக்கடி நிலைகளும் ரணில் விக்ரமசிங்கவால் முகாமைத்துவம் செய்யப்பட்டவை என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த நெருக்கடியையும் அவரே முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, நாட்டை பொறுப்பேற்க அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

