முழுவதுமாக தீப்பிடித்து எரிந்த பேருந்து: 14 பேர் உடல் கருகி பலி

0

 


ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. 


மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். 

இதனால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை . விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர். 

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 14 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். 25-க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பி உள்ளனர். 

காயமடைந்தவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இதனால் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top