புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய தலைமையில் குறித்த அமைச்சரவைக் கூட்டம் இடம் பெறவுள்ளது.
இதேவேளை பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் (21) சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
நேற்றைய தினம் 21 அமைச்சரவை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
