அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 2024 நவம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2024 நவம்பர் 23 ஆம் திகதி முதல் 2025 ஜனவரி 01 வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 2025 ஜனவரி 02 ஆம் திகதி முதல் ஜனவரி 17 ஆம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
