ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபேசகரவை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,
தமது பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே ஷாந்த அபேசகரவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
ஷாந்த அபேசகரவின் வீட்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

