பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட நெருக்கடிகளை விட, தாக்குதல்களுக்கான காரணம் குறித்து ஆராய்வதிலேயே நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்களை தடுக்காதமையால் ஏற்பட்ட பிரச்சினையை விட தற்போது, அதற்கான காரணத்தை கண்டறியவதில் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நாடு ஸ்தீரமற்றுப் போயுள்ளதாகவும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய இளைஞர்களிடத்தில் நாடு ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், குறித்த இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக இருக்கக் கூடாது என்றும் நாமல் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

