இஸ்மாயில் பைஷல் -
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை நகரசபை அதிகாரத்திற்க்குட்பட்ட தமிழ் பிரதேசத்தின் அமைப்பாளராக கே.கிருஸ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
திருகோணமலை சுதேச திணைக்களத்தில் கடமையாற்றும் இவர் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கான பல சேவைகளை செய்து வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

