இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய "நஞ்சுண்ட நிலவு" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31.03.2019, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் அல்-ஹாஜ் கலாபூஷணம் எஸ். அஹமது (JP) அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் கௌரவ. ரிசாட் பதியுதீன் (MP) அவர்கள் கலந்துகொண்டதோடு, கௌரவ அதிதிகளாக, அல்-ஹாஜ் கௌரவ பஷீர் சேகுதாவுத், கலாநிதி கௌரவ எஸ்.எம்.எம். இஸ்மாயில்(பா.உ.),நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ அல்-ஹாஜ் எம்.எ.எம். தாகிர், உபதவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, விசேட அதிதிகளாக கௌரவ, கலாநிதி எ.எம்.ஜெமீல், கௌரவ கலாநிதி ஷிராஷ் மீராசாஹிர், டாக்டர் எ.ல்.எம்.பரீட், அவர்களோடு இலக்கிய கலைஞர்கள், ஊர் பிரமுவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






