இலங்கை பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தேடுதல் வேட்டை.

A. R. M. Majeed
0

 



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு இந்தோனேசியாவிற்குப் புறப்பட்டுள்ளது. 


கஞ்சிபானி இம்ரான் மலேசியாவில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரைக் கைது செய்வதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு மலேசியாவிற்குச் சென்றதாகவும் ஆனால் கஞ்சிபானி இம்ரான் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், கஞ்சிபானி இம்ரானின் முக்கிய அடியாட்களில் ஒருவராகக் கருதப்படும் 'ரத்மலானே சைமா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூன்று பேரை மலேசியாவில் கைது செய்வதிலும் பொலிஸார் வெற்றி கண்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top