இறந்தவர்களுடன் 'பேச' உதவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

0

 


    • ஏமி மாக்ரில்
    • பதவி,

உங்கள் அன்புக்குரியவர் இறந்துவிட்டால், அவர்களுடன் தொடர்ந்து பேச விரும்புவீர்களா?

நினைவுகள் அல்லது சேமித்த செய்திகள் மூலம் அல்ல, மாறாக செயற்கை நுண்ணறிவு மூலம் - அவர்களின் உரைகள், மின்னஞ்சல்கள் மற்றும் குரல் குறிப்புகளைப் பயன்படுத்தி, அவர்களின் தொனியிலும் பாணியிலும் பதிலளிக்கும் ஒரு சாட்பாட்.

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் "டிஜிட்டல் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை" துறையின் ஒரு பகுதியாக இத்தகைய சேவைகளை வழங்குகின்றன, இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடையது, சிலர் தங்கள் துக்கத்தைச் சமாளிக்க இதை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர்.

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜென்னி கிட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பத்திரிகை இதழான மெமரி, மைண்ட் அண்ட் மீடியாவில் வெளியிடப்பட்ட டெத்பாட்கள் என்று அழைக்கப்படுபவை பற்றிய ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். அதன் முடிவுகளை "கவர்ச்சிகரமான மற்றும் தொந்தரவான" என்று அவர் விவரித்தார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top