வாழைச்சேனை, கோறளைப்பற்று காதி நீதிமன்ற காதி நீதிபதி ஒருவர் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று (17) இலஞ்சம் அல்லது ஊழில் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
