போலி வைத்திய நிலையமாக இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை !

0

 


முல்லேரியா, அம்பத்தலை சந்திக்கு அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் ஹோமியோபதி வைத்திய நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.


மேற்கு மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மூன்று பெண்களும் ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண், ஹோமியோபதி வைத்தியர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதுடன் அவரே அந்த நிலையத்தின் உரிமையாளர் எனவும் தெரியவந்துள்ளது.

இங்கு வருபவர்களிடம் ஒரு மணிநேரத்திற்கு 7,000 முதல் 10,000 ரூபா வரை அறவிடப்பட்டு வந்தமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top