வாழைச்சேனை கல்குடா பட்டியடிச்சேனை அருள்மிகு ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது
இன்றைய தினம் 15-11-2025 சனிக்கிழமை அருள்மிகு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய் காப்பு வைபவம் நடைபெற்று வருகிறது
இதனை சிறப்பிக்கும் முகமாக பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் திரு.கி.கெங்கேஸ்வரன் அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட சமயமும் சமூகமும் வளர்ப்போம் என்ற தொனிப்பொருளுக்கமைய
இன்றைய ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய எண்ணெய்க்காப்பு வைபவத்தினை சிறப்பிக்கும் வகையில் அடியவர்களுக்கு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் பாலாம்பிகா மகளிர் அணியினரால் எண்ணெய்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் பல பக்த அடியார்கள் கலந்து கொண்டு எண்ணெய் காப்பு சாத்தி அருள்மிகு ஸ்ரீ மஹா விஸ்ணுவின் அருளாசியை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது








