கல்முனையில் கஞ்சாவுடன் விசேட அதிரடிப் படையினரினால் ஒருவர் கைது!

0

 


சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மாதவன் வீதி பகுதியில் கஞ்சாவுடன் நேற்று திங்கட்கிழமை (06)  இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


 கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, கஞ்சாவுடன்  சந்தேக நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கல்முனை 03 பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 800 மில்லி கிராம் கஞங மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top