மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17)அறிவித்துள்ளது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0 - 30 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் 06 ரூபாவிலிருந்து 04 ரூபாயாகவும், 31 - 60 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் 09 ரூபாயிலிருந்து 06 ரூபாயாகவும் குறைக்கப்படும்.
குறித்த கட்டண மாற்றமானது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.
