புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் ஹரிணி , கல்வி , உயர்கல்வி , தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
விஜித ஹேரத் வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு.
கே.டி.லால்காந்த - விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சு.
அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைச்சு.
இராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு.