பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்டு உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
