"சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்" ஏற்பாடு செய்த சர்வதேச ஊடக சுதந்திர தின நிகழ்வு



(றிஸ்வான் சாலிஹூ)


சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு "சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்" ஏற்பாடு செய்த விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை (03) கல்முனை தனியார் விடுதி ஒன்றில், போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.ஜஃபர் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.


இதில் பிரதம விருந்தினராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்முனை கிளையின் தலைவர் மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷீத் (முப்தி) கலந்து கொண்டார்.


ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷீத் அவர்கள், இச்சமூகத்தின் சிறந்த வழிகாட்டியாகவும், மார்க்க பிரச்சாரம் செய்து இளைஞர் சமூகத்தை நல்வழிப்படுத்தி அவர்களை சமூகத்தில் நல்லவர்களாக, போதைவஸ்துக்கு அடிமையாகமல் மாற்றும் இவருடைய செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் போரத்தின் நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி ஞாபக சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.


இந்நிகழ்வில் போரத்தின் பொதுச்செயலாளர் ஊடகவியலாளர் எஸ்.அஷ்ரப் கான், பொருளாளர் ஐ.ஏ.சிறாஜ், தவிசாளர் றியாஸ் ஆதம், தேசிய அமைப்பாளர் எம்.ஏ.றமீஸ் உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.





Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section