யாரும் செய்யாத புதிய வரலாற்று சாதனை! மிரட்டிய பாகிஸ்தான் கேப்டன்

0

 


பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடந்தது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷாய் ஹோப் 127 ஓட்டங்களும், ப்ரூக்ஸ் 70 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

யாரும் செய்யாத புதிய வரலாற்று சாதனை! மிரட்டிய பாகிஸ்தான் கேப்டன் | Babar Azam New World Record In Odi

யாரும் செய்யாத புதிய வரலாற்று சாதனை! மிரட்டிய பாகிஸ்தான் கேப்டன் | Babar Azam New World Record In Odi

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் அபார சதத்தினால் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 107 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்தார்.

யாரும் செய்யாத புதிய வரலாற்று சாதனை! மிரட்டிய பாகிஸ்தான் கேப்டன் | Babar Azam New World Record In Odi

Photo Credit: Reuters

இதன்மூலம் புதிய உலகசாதனை ஒன்றை அவர் படைத்தார். அதாவது, அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடித்த மூன்றாவது சதம் இதுவாகும்.

இதற்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசியிருந்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை, இருமுறை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். 

யாரும் செய்யாத புதிய வரலாற்று சாதனை! மிரட்டிய பாகிஸ்தான் கேப்டன் | Babar Azam New World Record In Odi

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top