தனியார் மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… .!

0

 


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜானகிராமன் – திவ்யா தம்பதியினர். திவ்யாவுக்கு ஏற்கனவே சிகிச்சையின் மூலம் கருத்தடை சாதனம் (காப்பர் T) பொருத்தப்பட்டிருந்தது.

காப்பர் T என்பது கர்ப்பத்தைத் தடுக்கும் பாதுகாப்பான சாதனம் மற்றும் பயனுள்ள முறையாகும். எனவேதான் அரசே இதனை பொருத்திக்கொள்ள பரிந்துரை செய்கிறது.

இந்நிலையில் இன்று காலை திவ்யா, மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனத்தை அகற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காலை 7.00 மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு திவ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், காலை 11.00 மணியாகியும், திவ்யாவை பற்றி எந்த தகவலும் இல்லை என்கின்றனர். மேலும், அந்த நேரத்தில் மருவத்துவர்கள் பரபரப்பாக செயல்பட்டு வந்ததால், உறவினர்கள் அச்சம் அடைந்து சந்தேகமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து உறவினர்கள் சண்டைபோட்டதால், பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி வந்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இதனை கண்டித்து இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, உறவினர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தனர். மேலும் மாவட்ட சுகாதார துறை சார்பில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top