இலங்கை யாருடைய நாடு என்றும், இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எது? இந்த நாடு 2500 வருடங்களுக்கு முன்னரும் இருந்ததாக கூறிய அவர் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தோற்றம் பெறும் முன்னரே, இந்த நாடு இருந்ததாகவும் கூறிய ஞானசாரர், இந்த கலாசாரத்தை தாமே தற்போதுவரை கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சிங்களம் தெரியாதமையால், தமக்கும், தமது மொழியை பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இதுதொடர்பாக நாம் மிகவும் கவலையடைவதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் தமிழர்களும், முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் வாழ வேண்டுமெனில், அவர்கள் முதலில் சிங்கள மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் தலைவராக வருபவர், தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என்பதோடு, தெற்கிலுள்ள சட்டத்திட்டங்களை வடக்கு கிழக்கிலும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒருவராகவும், இருக்கவேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் ஊடாக மட்டுமே இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்றும் இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும் எனவும் கூறிய அவர், தான் அண்மையில் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த போது, தமிழ் நாட்டுக்கு சென்ற ஓர் உணர்வு தக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன் வடக்கு ஒன்றும் தமிழ் நாட்டின் ஒரு பகுதி அல்ல என்றும், அங்கும் நாட்டின் சட்டத்திட்டங்கள் எங்கும் செல்லுபடியாகும் எனவும் , எனினும் அங்கு அரசமைப்பு மதிக்கப்படவில்லை எனவும் இதனால், அங்கு எம்மால் நீதியை எதிர்ப்பார்க்க முடியாதுள்ளதாகவும் கூறிய அவர், இதனை நாம் இப்படியே விட்டுவிட்டால், எதிர்க்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடெனவும் இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம் என்றும் ஏற்காதவர்கள், தங்களது உடமைகளுடன் தாராளமாக வேறு நாடுகளுக்கு செல்லாம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பயங்கரவாதத் தடைப்பிரிவில், ஞானசார தேரர் முன்னிலையானதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே தேரர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

