இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் சங்ககார வரலாற்று புகழ்மிக்க இங்கிலாந்தின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.
தற்போதைய தலைவர் செப்ரெம்பர் மாதத்தில் தனது பதவியிலிருந்து விலகியவுடன் சங்ககார அந்தப்பதவியை ஏற்றுக்கொள்வார்.
மிகவும் பழமைவாத மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரத்தியேகமான கிரிக்கெட் கிளப்என்ற பெருமையை பெற்றுள்ள இந்த அணி, தனது பாரம்பரியத்தை மீறி குமார் சங்ககாரவை 2019- 2020 ஆம் ஆண்டுக்கான தலைவராக தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.
232 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மெல்போர்ன் அணிக்கு வெள்ளையினத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்டுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தனது சொந்த நாட்டில் கிடைக்காத கௌரவம் மற்றும் மரியாதையை அந்நியதேசமொன்றில் சங்ககார பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

