களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐந்து வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்
படுத்திய குற்றச்சாட்டின்பேரில், பாடசாலை சிறுவன் ஒருவனை கைதுசெய்துள்ளதாக. களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுவனே, இவ்வாறு நேற்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், குறித்த சிறுமியை வைத்தியரிடம் அழைத்துசென்றபோது, சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருநதை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சிறுவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

