மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை (Batticaloa Campus) அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளபோதும் அமைச்சரவை உபகுழு அதனை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் தனியார் நிறுவனமாக நடாத்த ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்க பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.
அதனால் அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு நாள் விவாதம் ஒன்றை கோர இருக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

