வாகன நெரிசலைக் குறைப்பதற்காக கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் படகு சேவை
இதற்கமைவாக இலங்கை கடற்படையினால் பூர்த்தி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் போக்குவரத்து படகின் வெள்ளோட்டம் பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதும் கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் 15 நிமிடங்கள் குறைவான காலப்பகுதியில் பயணிக்க முடியும்.
அரச தகவல் திணைக்களம்

