கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், மும்மொழியிலான தேசிய பாடசாலையொன்றை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போது, அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி குறித்த பாடசாலை அமைப்பதற்கான திட்டத்துக்காக பேராதனையில் 10 ஏக்கர் அளவிலான நிலம் ஒதுக்கப்பட்டு, 1,141 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

