முஸ்லிம்களை எதிரிகளாக, பார்ப்பதை நிறுத்துங்கள் சபாநாயகர்

0



நாட்டின் சட்­டத்தை அனை­வரும் பின்­பற்றி செயற்­பட வேண்டும் என்றும் தற்­போது நாட்டில் இயங்கி வரு­கின்ற அடிப்­­டை­வாத கல்வி செயற்­பா­டுகள், சிறுவர் உரி­மை­களை மீறு­­தான இள­­யது திரு­­­முறை போன்ற விட­யங்கள் குறித்து பாரா­ளு­மன்றம் விரைவில் நடவடிக்­கை­களை மேற்­கொள்ளும் என  சபா­நாயகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.


திறைசே­ரியின் கேட்போர்கூடத்தில் இடம்­பெற்ற டீ.பீ. ஜய­தி­லக நினைவு தின நிகழ்வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறி­ய­தா­வது, 


அடிப்­ப­டை­வாதப் போக்கைக்கொண்ட முஸ்­லிம்கள் சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில், அனைத்து முஸ்லிம் மக்­க­ளையும் எதி­ரி­க­ளாக பார்ப்­பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படைவாதத்­திற்கு எதி­ராக எம்­முடன் இணைந்து செயற்­பட ஏனைய அனைத்து முஸ்­லிம்­களும் தயா­ரா­கவே உள்­ளனர். 


அதே­வேளை இலங்­கைக்கு பொருத்­த­மற்ற புர்கா ஆடையைத் தடை செய்­வது குறித்தும் முஸ்­லிம்­களும் தொடர்ந்தும் வலியுறுத்தித்தான் வரு­கின்­றனர்.


நாட்டின் சுதந்­திர போராட்­டங்­களின்போது டீ. பீ.ஜய­தி­லக, டீ.எஸ். சேனா­நா­யக்க ஆகி­யோர்­க­ளுடன் இணைந்து நாட்­டுக்­காக முஸ்லிம் தலை­வர்­களும்  செயற்­பட்­டனர் என்­பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்­போதும் பயங்­க­ர­வா­தி­களை ஒழிப்­ப­தற்­காக அடிப்படைவாதிகள் சிலரை தவிர ஏனைய அனைத்து முஸ்லிம் மக்­களும் முன்­வந்­துள்­ளனர்.


நாட்டின் சுமு­க­மான நிலை­மைக்கு பங்கம் விளை­விக்கும் வகையில் நாட்­டுக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­னாலே இன்று நாடு பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது.  பௌத்த சமயம் ஒருபோதும் இன மற்றும் மத பேதங்­களை போதிக்கவில்லை.  


சில அடிப்ப­டை­வாத முஸ்­லிம்களால்  மேற்­கொள்­ள­ப்படும் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­வது முஸ்லிம் மக்­களே.மற்றும் அடிப்­ப­டை­வாத கல்வி முறை, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் குறித்தும் பாராளுமன்றில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். நாட்டின் சட்டமானது அனைத்து மக்களுக்கும் சமமானது என்றும் குறிப்பிட்டார்.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top