மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் தொடர்ப்பில் கைது செய்யப்பட இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மாவனல்லை சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து குறித்த இருவரும், கடந்த ஜனவரி மாதம் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களை 90 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழங்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மாவனல்லை நீதிமன்றத்தினால் இளைஞர்கள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

