எனக்குள் ஒரு கேள்வியும், விடைகள் பலவும் உள்ளன. எது சரி?
"வரலாற்று வேட்டுகள் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் வடுக்களை விதைத்தே விட்டன.
யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட இன்று, அன்பார்ந்த இஸ்லாமிய-முஸ்லிம் சகோதரர்களை எப்படி கையாளுவது? அவர்களிடம் என்ன கூறுவது?"
1)தமிழை பேசினாலும், தனியான ஒரு இனமாக "நாம் முஸ்லிம்களே" என தம்மை அடையாள படுத்தி கொண்டுள்ளோரை, உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள். எங்கெங்கே முடியுமோ, ஆங்காங்கே கூட்டாக செயற்படுவோம், என்பதா?
2)இஸ்லாமியம் என்பது ஒரு மதம். அது இன அடையாளம் அல்ல. ஆகவே தமிழை பேசுவதால், "நாம் தமிழரே" என்போர் இணைந்து கொள்ளுங்கள்/செல்வோம்,
என்பதா??
3)அல்லது வழமை போல் "தமிழ் பேசுவோர்" என கூறி திரிவதா?
(இந்த ஆரோக்கியமான கருத்தாடலில் நுழைந்து இன, மத வாதம் கக்க வேண்டாம்!!!)

