கடும் மழை காலநிலையினால் நாவலப்பிட்டி நகர பிரதானவீதியில் வெள்ளப்பெருக்கெடுத்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
நேற்று மதியம் மலையகத்தின் பல பாகுதிகளிலும் கடும் மழை பெய்த நிலையில் கண்டி அட்டன் நாவலப்பிட்டி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதை படங்களில் காணலாம்.
கடும் வெப்பநிலையால் மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் தற்போது வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.

