அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் தன்னை பார்ப்பது, தொடுவது, கிள்ளுவது, உரசுவது போன்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தேர்வில் குறைவான மதிப்பெண் என்று மிரட்டி தன்னை கட்டுப்பாட்டில் வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பள்ளி முடிந்த பின்னர் அவரை காரில் அழைத்துச் சென்று ஆசிரியர் அத்துமீறியதாகவும், இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை மிரட்டல் விடுத்து கதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்த மாணவி, மான அவமானத்துக்கு அஞ்சி புகார் அளிக்காமல், பெற்றோரால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆனால், இந்த சம்பவத்தை அறிந்த மாணவியின் தோழிகள் ஐந்து பேர், பள்ளியின் தாளாளரான பாதிரியாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

முதலில் புகார் அளிக்க தயங்கிய மாணவியின் பெற்றோர், பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒத்துழைத்ததாகவும், இதையடுத்து ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவர் வேறு மாணவிகளிடமும் இதேபோல் அத்துமீறியதா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் பள்ளி மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.