பாடசாலை மாணவி கடத்தல் – பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்

0

 




அண்மையில் கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திற்கும், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



மாணவி கடத்தப்பட்ட தினம், சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடாக பயணித்த கம்பளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவுலகல பொலிஸாருக்கு அறிவித்த போதும், கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top