கம்பளை- கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து கம்பளை நோக்கி வந்த இந்த கார், வீதியை விட்டு விலகி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தவுலகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.