சம்மாந்துறை பொதுமக்கள் அவதானம்!
சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக பணமோசடி இடம்பெற்று வருகின்றது. இவ்விடயம் சம்மந்தமாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் போன்ற வாகனத்தில் வருகை தருபவர்கள் அவர்களுடைய தாய், மனைவி, சகோதரி மற்றும் சிறுபிள்ளைகளுடன் வருகைதந்து வாகனத்திற்கு எரிபொருள் இல்லை எனக்கூறி பண மோசடியில் சில நபர்கள் ஈடுபட்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
எனவே பொதுமக்கள் குறித்த விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அத்துடன், குறித்த நபர்களில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குங்கள்.
இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துவதால் பணமோசடியை தவிர்த்துக் கொள்ளலாம்.