29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர் கைது

0




 கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிட்குட்பட்ட விமலசிறி டி மெல் பகுதியில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை சேனநாயக்க மாவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய நபராவார்.

சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ;

3 கிலோகிராம் மற்றும் 349 கிராம் ஹேஷ்

25 கிராம் குஷ் கஞ்சா

30 கிராம் மாண்டி (செயற்கை இரசாயன மருந்து)

320 போதை மாத்திரைகள்

129 முத்திரைகள் (LSD)

1 துப்பாக்கி

2 வாள்கள்

1 பொலித்தீன் சீலர்

5 மின் தராசு

4,000 போதைப்பொருளை பொதி செய்யும் பக்கற்றுக்கள்

1250 ரூபாய் பணம்

1 கைத்தொலைபேசி

1 கார் 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top