கற்றாழையின் பயன்கள்

 




உடல் சூடு தணிய:

“கற்றாழைய ஒரு காயகற்ப மூலிகைனு சொல்லலாம். கற்றாழை பொடியை முறையா சாப்பிட்டு வந்தா, எப்பவும் இளமையா உடல் வன்மையோட வாழலாம். பொதுவா கற்றாழை உடல் சூட்ட தணிச்சு, உடலுக்கு வலிமை தருது.”

பெண்களுக்கான நோய்களுக்குத் தீர்வு:

“இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இருக்குறதால, இந்த கற்றாழைய “கன்னி, குமரி...” அப்படின்னும் சொல்லுவாங்க. கற்றாழைச் சாறு இல்லாட்டி கற்றாழை பொடிய முறையா சாப்பிட்டு வந்தா சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் பெண்களுக்கு குணமாகும் வாய்ப்புண்டு.”

வீக்கம் குறைய:

“கற்றாழைச் சாறை வெதுவெதுப்பா சூடாக்கி வீக்கத்தில, அடிப்பட்ட இடங்கள்ல இருக்குற சிவப்பான இடத்துல பூசி வந்தா நல்ல பலன் கிடைக்கும்.”

முடி வளர கற்றாழை:

“அதெல்லாம் சரி பாட்டி, கற்றாழையில நிறைய அழகு சாதனக் குறிப்புகள் இருக்குனு சொன்னீங்களே... அதுல ஒரு குறிப்பு சொல்லுங்களேன்!” பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து கேட்டேன்.

“சரி... சரி... சொல்றேன் பொறு...!” என்று சொல்லி சிரித்தவள், தொடர்ந்து கூறினாள்,

“கற்றாழை சாறை நல்லெண்ணெயோட (சம அளவு) கலந்து காய்ச்சி தலையில தினமும் தேச்சி வந்தா...”

“ம்... தேச்சி வந்தா, மூளை வளருமா பாட்டி...?”

“அது இருக்குறவங்களுக்குதாம்ப்பா வளரும். நீ அத தினமும் தலையில தேச்சி வந்தா, முடி நல்லா ஆரோக்கியமா வளரும்! நல்லா தூக்கமும் வரும்!”

சந்தடி சாக்கில் எனக்கு பல்பு கொடுத்த பாட்டியிடம் கொஞ்சம் கற்றாழை சாறை கேட்டு வாங்கி பார்சல் செய்துகொண்டு விடைபெற்றேன்.

குறிப்பு:

  • நீர்ச்சுருக்கு, உடல் வெப்பம், உடல் அரிப்பு: கற்றாழையை சாறெடுத்து வெண்ணெய் (அ) கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் (30 மிலி) நீர்ச்சுருக்கு (சிறுநீர் குறைந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படல்) உடல் வெப்பம், உடலரிப்பு நீங்கும்.
  • கண் நோய்கள்: கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவி, இதில் சிறிது படிகாரம் சேர்த்து, சிறு துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து நீர் வடியும். அந்நீரை கண்களில் விட கண் சிவப்பு, கண் நோய்கள் நீங்கும்.

ஈஷா ஆரோக்யா மருந்தகங்களில் கற்றாழை பொடிகிடைக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section