தேசிய மட்டத்தில் சாதனை படைத்த அமீர் அலிபுர வித்தியாலய மாணவன்

0

 


சாஹிப் மரைக்கார்


இறக்காமம் கல்விக் கோட்டத்தில் காணப்படும் கமு/சது/​அமீர் அலிபுரம் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவன் ஏ.ஏ. ஒமர் சயாப் (A.A. Omar Sayaf)  அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் (National Social Science Competition) பங்குபற்றி மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


​இந்த வெற்றியின் மூலம்  பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெரும் புகழைத் தேடித்தந்துள்ள மாணவன் ஒமர் சயாப் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் திரு.M.I. ஜௌபர் அவர்களின் தலைமையில் விசேட ஆராதனை நிகழ்வின் போது நடைபெற்றது. 


​இந்த மாணவனின்  வெற்றிப்பயணம் தொடரவும், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்டவும் பாடசாலை சமூகம் சார்பாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top