சுவிஸில் நடந்த டெஸ்லா கார் விபத்தில் போக்குவரத்து காவலர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.சனிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் சுவிட்சர்லாந்தின் மியுன்ச்விலென்(Münchwilen) A1 நெடுஞ்சாலையில் 58 வயதுடைய நபர் ஓட்டி வந்த டெஸ்லா கார் ஒன்று பொலிஸ் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஏற்கனவே அப்பகுதியில் ஏற்பட்ட மற்றொரு சாலை விபத்தை தொடர்ந்து அப்பகுதிக்கான போக்குவரத்தை தடுத்து நிறுத்துவதற்காகவும், எச்சரிக்கை விடுப்பதற்காகவும் பொலிஸார் வாகனமானது சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது.சேதாரம் சுமார் 1,00,000 சுவிஸ் பிராங்குகள்(1.25 லட்சம் டொலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.விபத்திற்கு கார் ஓட்டுநர் காரணமாக அல்லது டெஸ்லா காரின் தானியங்கி ஓட்டுநர் முறை குறைப்பாட என துர்காவ் மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்
