ஹெரோயின் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப் படையினரினால் ஒருவர் கைது!

0

 


சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 


அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  அட்டப்பளம் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று சனிக்கிழமை (03) இரவு 07.00 மணியளவில் சாகாமம் விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


சாகாமம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரை சாகாமம் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.


நிந்தவூர் 23 ஐச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 160 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த கைது நடவடிக்கையானது சாங்காமம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மற்றும் சாகாமம் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top