நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று இடம்பெற்றது.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அரை சதமடித்தனர்.
பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் மதீச பத்திரன 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 211 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை தழுவியது.
அந்த அணி சார்பில் ஆயுஷ் மாத்ரே 94 ஓட்டங்களையும், ஜடேஜா 77 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையில், விராட் கோலி தனது 53-வது ஓட்டத்தினை கடந்த போது ஐபிஎல் தொடரில் 8,500 ஓட்டங்கள் குவித்த முதல் வீரரானார்.
விராட் கோலி இதுவரை 263 போட்டிகளில் விளையாடி 8 சதம், 62 அரைசதம் உள்பட 8,509 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா 267 போட்டிகளில் விளையாடி 6,921 ஓட்டங்களும், ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி 6,769 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.