கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற அரச பேருந்து விபத்து!

0

 



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் இன்று (14) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.


கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியருகில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டா ரக வாகனத்தில் மோதி இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.


இவ்விபத்து சம்பத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.


இந்நிலையில் இவ்விபத்துச் சம்பவத்தில் அருலிருந்து பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வட்டா ரக வாகனமும், பேருந்தின் முன்பகுதியில் பாரிய சேதம் அடைந்துள்ளன.






Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top