பேருந்து விபத்தில் சிக்கி 14 பேர் பலி

0

 


தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தொன்று திடீரென வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது ஹாட் வனாக்கார்ன் தேசிய பூங்கா அருகே இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பேருந்தில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பேருந்து ஓட்டுனர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலனோர் தாய்லாந்து, பர்மா மற்றும் வீராபெட் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூ றியுள்ளனர்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top