மருதானை ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழே விழுந்த நபரை விசாரணை அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 30 வயதுடைய 5 அடி 8 அங்குல உயரமும், மெலிந்த உடலும், குறைவான தலைமுடியும், தாடியும் வளர்த்து, ஊதா நிற மேற்சட்டையும் மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

