வாடகைக்கு இருந்தவர் அறையில் இருந்து வந்த துர்நாற்றம்~ஆராய்ந்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0

 


பாணந்துறை, வெகட, பஹங்கம பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் ஒன்று பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் இந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் இந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
குறித்த சடலம்  (29) பிற்பகல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இரண்டு மாடிகளை கொண்ட குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கீழ் தளத்தில் இருந்ததாகவும், மரணம் தொடர்பில் தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top