ஓடும் பேரூந்தில் பெண் வைத்தியரிடம் நிர்வாணமாக நின்று பாலியல் சேட்டை புரிந்த இளைஞன்..?
Author -
TODAYCEYLON
May 21, 2023
0
ஓடும் பேருந்தில் பெண் வைத்தியரின் முன்பு தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக பயணித்த வாலிபரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் மெட்ரோ ரயிலில் பிகினி போன்று உடையணிந்து பயணித்த பெண், இதேபோன்று காதலனின் மடியில் படுத்தபடி முத்தமிட்டு கொண்ட காதலி போன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் செய்தியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின.
மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று இரவு திருவனந்தபுரம் சென்ற அரசு பேருந்தில் பெண் மருத்துவர் ஒருவர் பயணித்துள்ளார். மூன்று பேர் அமரும் அந்த பேருந்தின் இருக்கையில் ஜன்னல் ஓரம் வாலிபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
அந்த வாலிபர், அருகில் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதை பற்றி கவலை இன்றி, தனது ஆடைகளை கழற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், வேறுபக்கமாக திரும்பி அமர்ந்துள்ளார்.
இதன் பின்னரும் அந்த வாலிபர் தனது ஆபாச நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வைத்தியர், அந்த வாலிபரின் செய்கைகள் குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து பெண் வைத்தியர் முன் அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்ட மதுரையை சேர்ந்த செல்வா என்ற இளைஞரை கைது செய்தனர்.