ஆயுள் தண்டனை கைதி உட்பட 10 பேர் O/L பரீட்சைக்குத் தெரிவு

0



நாட்டில் நாளை ஆரம்பமாகவுள்ள சதாரணத் தரப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றவுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் வடரக சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும் அடங்குவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

இவர்கள் வடரக மற்றும் மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் இருந்து இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக அவர் கூறினார்.

பத்து பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் உள்ளதாக சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.
TN
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top