நாளை(17) வழமைபோல் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
நாளை பாடசாலை விடுமுறை என தகவல் பரவிவருகிறது.
வெறும் வதந்தி

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவல் பகிரப்படுகிறது.
இது வெறும் வதந்தி எனக் கூறும் கல்வி இராஜாங்க அமைச்சர், நாளை(17) வழமைபோல பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அறிக்கை
இதேவேளை, அனைத்து அரச பாடசாலைகளும் திட்டமிட்டபடி நாளை (17) திறக்கப்படும் என கல்வி அமைச்சும் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

