சாய்ந்தமருதில் முஅத்தீன் மற்றும் கத்திப்மார்களுக்கு உலர் உணவு பொதி!

Dsa
0

 



நூருல் ஹுதா உமர் 


கடந்த காலங்களைப் போன்று, புனித ரமழானை முன்னிட்டு முபாறக் டெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனரினால் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தீன் மற்றும் கத்திப்மாருக்கு உலர் உணவு பொதியும் பண அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.


முபாறக் டெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முபாறக் டெக்ஸ்டையில் நிருவனரும் அவரது தந்தையுமான அல்ஹாஜ் மீராசாஹிப், முஅத்தின் கத்திப் சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரசாதி) சம்மேளனத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தீன் மற்றும் கத்திப்மார் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளை கருத்தில்கொண்டே முபாறக் டெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top