கொழும்பை முற்றுகையிடவுள்ள பெருந்திரளான மக்கள்..! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

0

 


கொழும்பில் இன்றைய தினம் (20.02.2023) போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கு அல்லது பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் பொலிஸார் ஒருபோதும் தலையிட மாட்டார்கள். ஆனால் சிலர் தற்போதுள்ள சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

குறிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

முதலாம் இணைப்பு

கொழும்பை முற்றுகையிடவுள்ள பெருந்திரளான மக்கள்..! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை | Feb 20Th Protest In Colombo Sjb Protest

பெருந்தொகையான மக்களுடன் கொழும்பிற்கு வந்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (20.02.2023) மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பை ஐக்கிய மக்கள் சக்தி முற்றுகையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

தேர்தலை பிற்போடுவதற்கான காரணம்

மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடப்படுவது பணப்பற்றாக் குறையினால் அல்ல, நாட்டை ஆளும் ஜனாதிபதிக்கோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ மக்கள் இல்லாத காரணத்தினாலேயாகும்.

கொழும்பை முற்றுகையிடவுள்ள பெருந்திரளான மக்கள்..! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை | Feb 20Th Protest In Colombo Sjb Protest

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்த வகையிலாவது நிறுத்துவதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரை ஐக்கிய மக்கள் சக்தி போராடும் என குறிப்பிட்டிருந்தார். 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top