மிரிஹான பொலிஸ் பிரிவில், நேற்று (18) மாலை தனது உடலுக்கு தீ வைத்து, மனைவியையும் கட்டிப்பிடித்து எரிக்க முயன்ற நபரின் முயற்சியை பொலிஸ் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
குறித்த நபர் தனது மனைவிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

